Saturday, 29 September 2012

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் பதவி விலகல்; காரணம் தெரியவில்லை

தமிழ்நாடு சட்டமன்ற அவைத் தலைவராக இருந்துவந்த டி.ஜெயக்குமார் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
2011 மே மாதம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியமைத்த வேளையில் சட்டமன்ற சபாநாயகராகத் தெரிவாகியிருந்தவர் இவர்.
சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெயக்குமார் 91ஆம் ஆண்டு அமைந்த அதிமுக ஆட்சியில் மீன்வளத்துறை, பால்வள அபிவிருத்தித் துறை, கால்நடை வளத்துறை, காட்டு இலாகா, முன்னாள் இராணுவத்தினர் நலத்துறை, சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான அமைச்சராக இவர் இருந்தார்.
2001ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் சட்டத்துறை, தகவல்தொழில்நுட்பம், மின்விநியோகம் ஆகிய துறைகளுக்கு இவர் அமைச்சராக இருந்துள்ளார்.
ஜெயக்குமார் இராஜினாமா செய்ததற்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
ஜெயக்குமார் பதவி விலகலை அடுத்து சபாநாயகரின் பணிகளை துணை சபாநாயகர் பி.தனபால் கவனிப்பார் என சட்டமன்ற செயலாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment