Showing posts with label tamilnadu. Show all posts
Showing posts with label tamilnadu. Show all posts

Friday, 18 July 2014

மின்சார நுகர்வு கட்டணம் செலுத்த மக்கள் தமிழ்நாடு மின்சார வாரியம் இணையத்தளம் ஆன்லைன் மூலம் செலுத்தலாம்

மின்சார நுகர்வு கட்டணம் செலுத்த மக்கள்  தமிழ்நாடு மின்சார வாரியம் இணையத்தளம் ஆன்லைன் மூலம் செலுத்தலாம்

முதலில் மின்சார நுகர்வு கட்டணம் தெரிந்து கொள்ள  http://tneb.tnebnet.org/newlt/menu3.html


மின்சார நுகர்வு கட்டணம் செலுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் இணையத்தளம்
 
 
TNEB / TANGEDCO portal (https://www.tnebnet.org/awp/login): TANGEDCO or Tamil Nadu Generation and Distribution Corporation Ltd is the new electricity distribution company in Tamil Nadu. Earlier it was called TNEB or Tamil Nadu Electricity Board. The new discom or distribution company has a new website http://www.tangedco.gov.in/ and their new online bill payment portal link is as mentioned above. The portal provides all facilities to make bill payment online and a lot of their consumers use it. One just needs to create a login on the portal using the customer number or service number.

Monday, 14 October 2013

ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் தங்கள் வசூலைத் தொடங்கியுள்ளன-தீபாவளி பண்டிகைக்கு

இன்னும் 20 நாட்கள் இருக்கிற நிலையில், ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் தங்கள் வசூலைத் தொடங்கியுள்ளன. சென்னை மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பாலோர், பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர். இவர்களில் கணிசமானோர், தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனை பயன்படுத்தி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின் போது, பொதுமக்களிடம் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிகப் பணம் வசூலிப்பது வழக்கம். அடுத்த மாதம் 2-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் வரும் 30, 31 மற்றும் அடுத்த மாதம் 1- ம் தேதி ஆகிய நாட்களில் தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு முடிந்துவிட்டன. அதுபோல் அரசு விரைவு பஸ்களில் பயணிப்பதற்கான முன் பதிவுகளும் முடியும் தருவாயில் உ ள்ளன. இதைத் தொடர்ந்து ஆம்னி பேருந்துகள் இந்த ஆண்டும் பயணிகளிடம் அதிக கட்டணத்தை வேட்டையாட தொடங்கி விட்டன. இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் தெரிவித்ததாவது: அரசு சொகுசு பேருந்துகளில் பயணிக்க திருச்சிக்கு ரூ.260, மதுரைக்கு ரூ.350, திருநெல்வேலிக்கு ரூ. 465, கன்னியாகுமரிக்கு ரூ.530, கோயம்புத்தூருக்கு ரூ.420 என, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், ஆம்னி சொகுசு பேருந்துகளில் திருச்சிக்கு ரூ.500, மதுரைக்கு ரூ.560, திருநெல் வேலிக்கு ரூ.630, கன்னியா குமரிக்கு ரூ.690, கோயம்புத்தூ ருக்கு ரூ.580 என, கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில், பிரபலமான ஆம்னி பஸ் நிறுவனங்களில், வழக்க மான பஸ்களில் தீபாவளிக்கான முன் பதிவு முடிந்துவிட்டது. இனி வாய்ப்பில்லை என்கிறார்கள். மற்ற நிறுவனங்களிலோ, சிறப்பு பஸ்கள் விட உள்ளோம். அதற்கு ஆ ன்-லைனில் முன் பதிவு செய்யுங்கள் என்கிறார்கள். ஆன்- லைன் முன் பதிவில் திருநெல்வேலிக்கு ரூ. 1200, திருச்சிக்கு ரூ.700, ரூ 1000 என்கிற ரீதியில் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கிற நிலையில், பயணிகளிடம் அதிக கட்டணத்தை வேட்டையாட ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இப்போதே தொடங்கிவிட்டார்கள். இதைத் தடுக்க போக்குவரத்துத் துறை உரிய நடவடிக்கையை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Sunday, 7 April 2013

புதிய தலைமுறைத் தமிழன் விருதுகள் -2013

தமிழ் இலக்கியம், கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த தமிழர்களை கவுரவிக்கும் வகையில் புதிய தலைமுறைத் தமிழன் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. சென்னையில் நடைபெற்ற வண்ணமயமான விழாவில், கவிக்கோ அப்துல்ரஹ்மான், நடிகர் கமல்ஹாசன், டாக்டர் சிவதாணுப்பிள்ளை உள்ளிட்ட 12 பேருக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன. 

தமிழகத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த, பல்வேறு துறைகளைச் சேர்ந்த சாதனைத் தமிழர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து, விருதுகளை வழங்கிச் சிறப்பித்து வருகிறது புதியதலைமுறை. இரண்டாம் ஆண்டாக இந்தாண்டும் விருதுக்கு உரியவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான விழா சென்னை நந்தம்பாக்கம் வணிக மையத்தில், கலை நேர்த்தியுடன் கட்டமைக்கப்பட்ட பிரம்மாண்டக் கலையரங்கில் இன்று நடைபெற்றது.

இதில், கலை, விளையாட்டு, இலக்கியம், அறிவியல், வணிகம், சமூகசேவை ஆகிய 6 பிரிவுகளில் சாதனை படைத்த தமிழர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் சாதனையாளர்களுக்கான வாக்குகள் நேரடியாகவும், தொலைபேசி, குறுஞ்செய்தி மற்றும் இணையதளம் வழியாகவும் பெறப்பட்டன.

அதிக வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு பிரிவுக்கான சாதனையாளர்களையும் விருதுக்குழு தேர்வு செய்தது. அதேபோல, 6 பிரிவுகளிலும் நம்பிக்கை அளிக்கக் கூடிய இளம் சாதனையாளர்கள், நம்பிக்கை நட்சத்திரம் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

தொழில் துறை

தொழில்துறையின் சாதனைத் தமிழராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த வெள்ளையனுக்கு புதிய தலைமுறையின் தமிழன் விருது வழங்கப்பட்டது. இந்தத் துறையின் நம்பிக்கை நட்சத்திரமாக கண்டெய்னரை வசிப்பிடமாக மாற்றித் தொழில் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்த வான்மதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இலக்கியம்

தமிழ் இலக்கியத் துறைக்கான சாதனைத் தமிழர் விருது கவிக்கோ அப்துல் ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது. இந்தத் துறையின் நம்பிக்கை நட்சத்திரத்துக்கான விருதை தமிழ்ச்செல்வி பெற்றார்.

விளையாட்டுத்துறை

விளையாட்டுத் துறையின் சாதனைத் தமிழருக்கான விருது ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளைக்கு வழங்கப்பட்டது. இந்தத் துறையின் நம்பிக்கை நட்சத்திரமாக கால்பந்து வீராங்கனை ராதிகா தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார்.

சமூக சேவை 


சமூகசேவையில் சாதனை படைத்த தமிழராக நிலமற்ற ஏழை விவசாயிகளுக்காகப் போராடி வரும் கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் தேர்வு செய்யப்பட்டு, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்தத் துறையின் நம்பிக்கை நட்சத்திரத்துக்கான விருது ஏரிகளைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அருண் கிருஷ்ணமூர்த்திக்கு வழங்கப்பட்டது.

அறிவியல் - தொழில்நுட்பம்

அறிவியல் துறையில் சாதனை படைத்த தமிழராக டாக்டர் சிவதாணு பிள்ளை தேர்வு செய்யப்பட்டுள்ளார். இத்துறையின் நம்பிக்கை நட்சத்திர விருதை சிறிய ரக டிராக்டர்களை வடிவமைத்த ரங்கசாமி பெற்றார்.

கலைத்துறை 


கலைத்துறையின் சாதனைத் தமிழராக நடிகர் கமல்ஹாசன் கௌரவிக்கப்பட்டார். இந்தத் துறையின் நம்பிக்கை நட்சத்திரமாக வீதி நாடகக் கலைஞர் சந்திரன் தேர்வு செய்யப்பட்டார்.

Sunday, 31 March 2013

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்

திருநெல்வேலி நகரின் மைய பகுதியில் உள்ளது அருள்மிகு நெல்லையப்பர் கோவில் . இறைவன் திருநாமம் நெல்லையப்பர் .அம்மன் திருநாமம் காந்திமதி . ஸ்தல வரலாறு படி ஒரு சிவ பக்தன் தினமும் வீடு வீடாக சென்று பெற்று வந்த நெல்லை இறைவன் நைவேதியத்துக்கு கொடுப்பது வழக்கம் .இப்படி சேகரித்த நெல்லை சன்னதி முன் உலரவிட்ட பின் அவர் குளிக்க செல்வது வழக்கம் .
ஒரு நாள் அவ்வாறு குளிக்க சென்ற பொழுது திடீரென்று மழை பெய்திருக்கிறது.நெல நனைந்து விடுமே என்ற பதட்டத்தில் பக்தன் வேகமாக வந்த பார்த்த பொழுது ஒரு அதிசயத்தை கண்டார்.நெல் உலருவதற்கு போட்டிருந்த  இடத்தில் மட்டும் மழை பெய்யவில்லை .அதை சுற்றி மட்டும் மழை பெய்திருந்தது .நெல் உலர்த்திய இடத்தில் வெயில் அடித்தது . இறைவன் நெல்லுக்கு வேலி அமைத்து காத்ததினால் இந்த நகருக்கு திருநெல்வேலி என்ற காரண பெயர் வந்தது.அதுவரை இந்த ஸ்தலத்தின் பெயர்  வேணுவனம் என்று இருந்ததாக வரலாறு .இன்னொரு சிறப்பு சிவபெருமான் நடராச பெருமானாக நடனமாடிய ஐந்து திருசபைகளில் ,இதுவும் ஓன்று .நெல்லைஅப்பர் கோவில் தாமிரை சபை என்று அழைக்க படுகிறது .இங்கும் மதுரை மீனாக்ஷி கோவிலில் உள்ளது போல ஒரு ஆயிரம் கால் மண்டபம் உள்ளது .ஆண்டுதோறும் அம்மன் திருகல்யாணம் இந்த மண்டபத்தில் நடைபெறும் .இரண்டாவது பிரகாரத்தில் தாமிரை சபை உள்ளது .மூன்றாவது பிரகாரத்தில் முரக பெருமானுக்கு தனி சன்னதி உண்டு.மயில் அமர்ந்த கோலத்தில் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருகிறார்.இன்னொரு சிறப்பு தமிழகம் எங்கும் உள்ள கோவில்களில் மார்கழி மாதம் அதிகாலை 4 மணிக்கே திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும் .அனால் நெல்லையப்பர் கோவிலில் மார்கழி சிறப்பு ஆராதனைகள் இல்லை.அதற்க்கு பதில் கார்த்திகை மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கே திறந்து சிறப்பு ஆராதனைகள் செய்யபடுகிறது.


ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது.[1]அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.

கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். இது சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
நெல்லையப்பர் கோவில் பிரகாரத்திலுள்ள இசைத் தூண்கள்இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயேஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான்தாமிர சபைஉள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலின் உள்ளே மிகப் பெரிய உள் தெப்பம் ஒன்று உள்ளது. இதுபோல் கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தூரத்தில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளது.

Thursday, 7 March 2013

மார்ச்சு 08 - உலக மகளிர் தினம்..

 மார்ச்சு 08 - உலக மகளிர் தினம்..
இனிய வாழ்த்துக்கள் மகளிர்
அனைவருக்கும். நல் வணக்கத்துடன்...
 மகாகவி பாரதியின் பார்வையில் புதுமைப் பெண்ணின்
இலக்கணம்..
 "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெஞ்சுரம்"
 "சேர்த்த பொருளை சிக்கனமா செலவு செய்ய
பக்குவமா அம்மா கையில கொடுத்து போடு
செல்லக்கண்ணு..
 அத ஆறு நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு"..
 பட்டுக்கோட்டையாரின் பாட்டு வரிகள்...
 மேற்கோள்களை நினைவு கூர்ந்து பாரதி
மொழிந்தவாறு
"போற்றி போற்றி ஓர் ஆயிரம் போற்றி நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண்"..
 என இதயப் பூர்வமான மகளிர் தின
வாழ்த்துக்கள்..
 "நாட்டிற்க்கு ஏற்றம் தருவது
பெண்களின் முன்னேற்றம்"
- அறிஞர் அண்ணா..

Sunday, 7 October 2012

சமையல் கியாசை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையும் உயர்கிறது: டீலர்களுக்கு ஆதரவாக அரசு முடிவு


சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோக டீலர்களுக்கு வழங்கப்படும் கமிஷனை ரூ.25.83-ல் இருந்து ரூ.37.25 ஆக நேற்று மத்திய அரசு உயர்த்தியது. இதனால் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.11.42 உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் சமையல் கியாஸ் டீலர்களின் கமிஷனை உயர்த்தியதுபோல பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் டீலர்களின் கமிஷனை உயர்த்துவது பற்றியும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தங்கள் கமிஷனை பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.2.10-ம், டீச லுக்கு லிட்டருக்கு ரூ.1.33-ம் அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். பங்க் உரிமையாளர்கள் இதுபற்றி கூறுகையில், நாங்கள் வருடத்துக்கு 365 நாளும் பணியாற்றுவதால் இயக்கச் செலவு அதிகமாகி விட்டது. எங்கள் முதலீடும் உயர்ந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் எங்களது கமிஷனை வெறும் 10 சதவீதம் உயர்த்துவதை எப்படி ஏற்க முடியும்? என்கிறார்கள்.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் கமிஷன் கோரிக்கையை முழுமையாக ஏற்க இயலாது என்று பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது. பெட்ரோலுக்கான கமிஷனை 23 பைசா உயர்த்தியும், டீசலுக்கான கமிஷனை 10 பைசா உயர்த்தியும் கொடுக்க பெட்ரோலியம் அமைச்சகம் முன் வந்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் பெட்ரோல்-டீசல் விலை சிறிது உயரும்.

அதாவது பெட்ரோல் விலை லிட்டருக்கு 67 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 42 பைசாவும் உயரும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு இப்படி விலையை அதிகரித்துகொண்டே செல்வது எழைகள், நடுத்தர மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.