Thursday, 25 December 2014

K.B- உடையாத நீர்க்குமிழி-கே.பாலச்சந்தர்




திரைவானில் நீ ஏவிவிட்ட
கணைகள் யாவும் -இன்று
நட்சத்திரங்களாய்
ஒளிர்கின்றன !
கலையுலகில்
நீண்ட பெரும் மலைத்தொடரை
எழுப்பிவிட்ட சிகரம் நீ !
உன்முன்னால் கைகூப்பி
நிற்கும் இரண்டு மாமலைகள் !
புதுமைப்பெண்களை
புதுக்கவிதைகளாய் - திரையில்
படைத்து விட்ட நீ
பட உலகத்தின் பாரதி !
வறுமையின் நிறம் சிகப்பென்று
பொறுமையை விடச்சொல்லி -
இளைய தலைமுறைக்கு
எதிர்நீச்சல் கற்று கொடுத்தாய் !
தண்ணீர் ! தண்ணீர் !-என்ற
கண்ணீர்க் கூக்குரலை
வெள்ளித்திரையில் எதிரொலித்த
வற்றாத நீர் ஊற்று நீ!
உன்வயது
எண்பத்து நாலென்று
செய்தியிலே சொன்னபோது
நம்பவில்லை நாங்கள் யாரும் !
அச்சமில்லை ! அச்சமில்லை !-என்ற
பச்சை தமிழன் நீ -வானத்து
வெண்மீன்கள் குறைவென்று
அங்கேயும் புத்தம் புது
தாரகைகளை படைக்கப்
போய்விட்டாயோ !
ஒரு வெற்றிடம் உருவாக்கி
சென்றுவிட்ட உன்னை எண்ணி
கலையுலகம் வடிக்கும்
கண்ணீர்க் கடலில் -
என்றுமே உடையாத நீர்க்குமிழி நீ !


 

Wednesday, 10 December 2014

பேஸ்புக்கில் வேலை: ஐஐடி மாணவிக்கு ரூ.2 கோடி சம்பளம்




மும்பை ஐஐடி மாணவி ஆஸ்தா அகர்வாலுக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடி சம்பளத்துடன் வேலை வாய்ப்பு அளிக்க முன்வந்துள்ளது பேஸ்புக் நிறுவனம்.


20 வயதாகும் ஆஸ்தா இப் போது ஐஐடியில் 4-வது ஆண்டு கணிப்பொறி அறிவியல் படித்து வருகிறார். கடந்த மே மாதம் கலி போர்னியாவில் பேஸ்புக் தலைமை யகத்தில் தனதுஇன்டர்ன் ஷிப்பயிற்சியை முடித்தார். அப் போது அவரது திறமையை அடை யாளம் கண்டுகொண்ட பேஸ்புக் நிறுவனம் அவருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளது. இது குறித்து ஆஸ்தா கூறியதாவது:

எனக்கு கிடைத்துள்ள இந்த வேலை மிகவும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்துள்ளது. “இன்டர்ன்ஷிப்பில்எனது பணியில் திருப்தியடைந்ததால்தான் இந்த வாய்ப்பை பேஸ்புக் நிறுவனம் எனக்கு வழங்கியுள்ளது. எனது படிப்பை முடித்தவுடன் அடுத்த ஆண்டு அக்டோபரில் பணியில் இணைவேன் என்றார்.

ஆஸ்தாவின் அப்பா அசோக் அகர்வால், ராஜஸ்தான் மாநில மின்வாரியத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். ஆஸ்தாவின் சகோதரி கெமிக்கல் இன்ஜினீயராக உள்ளார்.