Showing posts with label diesel price hike. Show all posts
Showing posts with label diesel price hike. Show all posts

Sunday, 7 October 2012

சமையல் கியாசை தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையும் உயர்கிறது: டீலர்களுக்கு ஆதரவாக அரசு முடிவு


சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோக டீலர்களுக்கு வழங்கப்படும் கமிஷனை ரூ.25.83-ல் இருந்து ரூ.37.25 ஆக நேற்று மத்திய அரசு உயர்த்தியது. இதனால் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.11.42 உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் சமையல் கியாஸ் டீலர்களின் கமிஷனை உயர்த்தியதுபோல பெட்ரோல், டீசல் விற்பனை செய்யும் டீலர்களின் கமிஷனை உயர்த்துவது பற்றியும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தங்கள் கமிஷனை பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.2.10-ம், டீச லுக்கு லிட்டருக்கு ரூ.1.33-ம் அதிகரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர். பங்க் உரிமையாளர்கள் இதுபற்றி கூறுகையில், நாங்கள் வருடத்துக்கு 365 நாளும் பணியாற்றுவதால் இயக்கச் செலவு அதிகமாகி விட்டது. எங்கள் முதலீடும் உயர்ந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் எங்களது கமிஷனை வெறும் 10 சதவீதம் உயர்த்துவதை எப்படி ஏற்க முடியும்? என்கிறார்கள்.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்களின் கமிஷன் கோரிக்கையை முழுமையாக ஏற்க இயலாது என்று பெட்ரோலிய அமைச்சகம் கூறியுள்ளது. பெட்ரோலுக்கான கமிஷனை 23 பைசா உயர்த்தியும், டீசலுக்கான கமிஷனை 10 பைசா உயர்த்தியும் கொடுக்க பெட்ரோலியம் அமைச்சகம் முன் வந்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் பெட்ரோல்-டீசல் விலை சிறிது உயரும்.

அதாவது பெட்ரோல் விலை லிட்டருக்கு 67 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 42 பைசாவும் உயரும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசு இப்படி விலையை அதிகரித்துகொண்டே செல்வது எழைகள், நடுத்தர மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.