Sunday, 31 March 2013

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்

திருநெல்வேலி நகரின் மைய பகுதியில் உள்ளது அருள்மிகு நெல்லையப்பர் கோவில் . இறைவன் திருநாமம் நெல்லையப்பர் .அம்மன் திருநாமம் காந்திமதி . ஸ்தல வரலாறு படி ஒரு சிவ பக்தன் தினமும் வீடு வீடாக சென்று பெற்று வந்த நெல்லை இறைவன் நைவேதியத்துக்கு கொடுப்பது வழக்கம் .இப்படி சேகரித்த நெல்லை சன்னதி முன் உலரவிட்ட பின் அவர் குளிக்க செல்வது வழக்கம் .
ஒரு நாள் அவ்வாறு குளிக்க சென்ற பொழுது திடீரென்று மழை பெய்திருக்கிறது.நெல நனைந்து விடுமே என்ற பதட்டத்தில் பக்தன் வேகமாக வந்த பார்த்த பொழுது ஒரு அதிசயத்தை கண்டார்.நெல் உலருவதற்கு போட்டிருந்த  இடத்தில் மட்டும் மழை பெய்யவில்லை .அதை சுற்றி மட்டும் மழை பெய்திருந்தது .நெல் உலர்த்திய இடத்தில் வெயில் அடித்தது . இறைவன் நெல்லுக்கு வேலி அமைத்து காத்ததினால் இந்த நகருக்கு திருநெல்வேலி என்ற காரண பெயர் வந்தது.அதுவரை இந்த ஸ்தலத்தின் பெயர்  வேணுவனம் என்று இருந்ததாக வரலாறு .இன்னொரு சிறப்பு சிவபெருமான் நடராச பெருமானாக நடனமாடிய ஐந்து திருசபைகளில் ,இதுவும் ஓன்று .நெல்லைஅப்பர் கோவில் தாமிரை சபை என்று அழைக்க படுகிறது .இங்கும் மதுரை மீனாக்ஷி கோவிலில் உள்ளது போல ஒரு ஆயிரம் கால் மண்டபம் உள்ளது .ஆண்டுதோறும் அம்மன் திருகல்யாணம் இந்த மண்டபத்தில் நடைபெறும் .இரண்டாவது பிரகாரத்தில் தாமிரை சபை உள்ளது .மூன்றாவது பிரகாரத்தில் முரக பெருமானுக்கு தனி சன்னதி உண்டு.மயில் அமர்ந்த கோலத்தில் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருகிறார்.இன்னொரு சிறப்பு தமிழகம் எங்கும் உள்ள கோவில்களில் மார்கழி மாதம் அதிகாலை 4 மணிக்கே திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும் .அனால் நெல்லையப்பர் கோவிலில் மார்கழி சிறப்பு ஆராதனைகள் இல்லை.அதற்க்கு பதில் கார்த்திகை மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கே திறந்து சிறப்பு ஆராதனைகள் செய்யபடுகிறது.


ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது.[1]அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது.

கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர் சிலை உள்ளது. அதற்கு முன்பு மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. சுமார் 9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவிந்தப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். இது சைவ வைணவ ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
நெல்லையப்பர் கோவில் பிரகாரத்திலுள்ள இசைத் தூண்கள்இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயேஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான்தாமிர சபைஉள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.

மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலின் உள்ளே மிகப் பெரிய உள் தெப்பம் ஒன்று உள்ளது. இதுபோல் கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தூரத்தில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளது.

Wednesday, 20 March 2013

Saindhu Saindhu HD YouTube

சாய்ந்து சாய்ந்து ...

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது
அடடா ஹே ஹே
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது
அடடா ஹே ஹே ஹே ..
விழியோடு விழி பேச
விரலோடு விரல் பேச
அடடா வேறு என்ன பேச

சாய்ந்து சாய்ந்து ...

என் தாயை போல ஒரு பெண்ணைத் தேடி
உன்னை கண்டு கொண்டேன்
ஓ ..என் தந்தை தோழன் ஒன்றான ஆணை
நான் கண்டு கொண்டேன்
அழகான உன் கூந்தல் மாக்கோலம்
அதை கேட்கும் எந்தன் வாசல்
காலம் வந்து அந்து கோலம் இடும்
உன் கண்ணை பார்த்தாலே
முன் ஜென்மம் போவேனே
அங்கே நீயும் நானும் நாம் ..

சாய்ந்து சாய்ந்து ...

கை வீசி காற்றில் நீ பேசும் அழகில்
மெய்யாகும் பொய்யும்
என் மார்பில் வீசும் உன் கூந்தல் வாசம்
ஏதோ செய்யும்
என் வீட்டில் வரும் உன் பாதம்
எந்நாளும் இது போதும்
இன்னும் இன்னும் என்ன தொலை தூரத்தில்
ஆள் யாரும் பார்க்காமல் தடயங்கள் இல்லாமல்
அன்பால் உன்னை நானும் கொல்வேன்

சாய்ந்து சாய்ந்து ...

Monday, 18 March 2013

தமிழ் இனி மெல்ல சாகும் என்றான் பாரதி

தமிழ் இனி மெல்ல சாகும் என்றான் பாரதி.எதை நினைத்து சொன்னானோ தெரியாது,ஆனால் இன்று அது உண்மையாகி கொண்டிருக்கிறது. துல்லியமாக சொன்னால் செத்து கொண்டிருக்கிறது என்பதை விட சாகடித்து கொண்டிருக்கிறோம் என்பதே பொருத்தமாக இருக்கும் .
தமிழின் இந்த நிலை குறித்து கேட்டால், மேற்கத்திய கலாச்சார மோகத்தின் காரணமாகவும், பகட்டுக்காகவும் தமிழை இளைய தலைமுறை புறக்கணித்து அழிக்கிறது என்கின்றனர். அதை குறித்து மனதில் தோன்றிய சில கேள்விகளும், விளக்கங்களுமே இந்த வலைப்பதிவு. இவர்கள் சொல்லும் இளைய தலைமுறையில் நானும் ஒருவன்.
என் பார்வையில் இவர்கள் சொல்வதில் எவ்வளவு நியாயம் இருக்கிறது என்றும்,நமது தலைமுறை தரப்பில் எவ்வளவு தவறுகள் இருக்கிறது என்றும் இங்கே நான் ஆராய்கிறேன்.என் தலைமுறை நண்பர்களுக்கு சில விஷயங்களை அடிகோடிட்டு காட்டிவிட்டு மேலே செல்கிறேன்.

ஜெர்மனியில்,ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்களிடம் ஆசிரியர் உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும் என கேட்டாராம்.ஜெர்மன் மாணவர்கள் ஜெர்மன்,பிரெஞ்சு என அதிகபட்சமாக இரண்டு என பதிலளித்தனர். அவ்வகுப்பில் இருந்த ஒரு புலம் பெயர்ந்த தமிழ் சிறுமி எனக்கு மூன்று மொழிகள் தெரியும் என்றாள்.அவளை பாராட்டிய ஆசிரியர் என்னென்ன என கேட்டார்.அவள் ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு என்றாள்.உன் தாய் மொழி என்ன என்று ஆசிரியர் கேட்டார். "தமிழ்" என்றாள் அந்த சிறுமி.நீ சொல்லிய மொழிகளில் தமிழ் இல்லையே என்றார் அவர் .ஆம்,எனக்கு தமிழில் சில வார்த்தைகள் மட்டுமே தெரியும் மற்றபடி மொழி தெரியாது என்றாள் அந்த சிறுமி. ச்சீ!,தாய் மொழி தெரியாது என சொல்ல உனக்கு வெட்கமாக இல்லையா?.தாய் மொழி தெரியாத நீ மற்ற மொழிகளையும், விஞ்ஞானத்தையும் எப்படி படிப்பாய், எப்படி புரிந்து கொள்வாய் .உன் சிந்தனை ஆற்றல் எப்படி வளரும் என்று திட்டியிருக்கிறார்.

மேலும், உன் தாய் மொழியை கற்று கொள்ளும் வரை என் வகுப்பில் நீ உட்காராதே என்று வெளியில் அனுப்பினாராம்.தாய்மொழியின் மகத்துவத்தை, சிந்தனை ஆற்றலில் அதன் பங்கை அவர் உணர்ந்திருந்தார்.

மேலும்,காந்தியடிகள் தாய் மொழி தெரியாதவர்கள் பற்றி சொல்லும் போது தாய் மொழி தெரியாதவர்கள், அதை படிக்காதவர்கள் பேடிகள் என காட்டமாக சொல்கிறார். தாய்மொழியை புறக்கணிப்பது பெற்ற தாயை புறக்கணிப்பது போன்றது என்கிறார். இன்றைய சமுதாயம் இதை எப்போது உணரப் போகிறது?.தமிழ் தெரியாத பேர்களை கூட சில சமயம் மன்னிக்கலாம் ஆனால் தமிழ் தெரிந்து கொண்டே அதில் பேசுவதை அவமானமாக நினைப்பவர்களை என்ன சொல்வது?.
முந்தைய தலைமுறை நமக்கு என்ன விட்டு சென்றது என யோசிக்காமல் ,நாம் அடுத்த தலைமுறைக்கு என்ன விட்டு செல்ல போகிறோம் என யோசித்தால் ஒருவேளை நமக்கு ஞானம் பிறக்கலாம். வருங்கால தலைமுறைக்கு நாம் விட்டு சொல்ல போவது பண்டைய தமிழ் மொழியையும், கலாச்சரதையுமா அல்லது நுனிநாக்கு ஆங்கிலத்தையும், ஹை-ஹீல்ஸ்,டிஸ்கோ,பார் கலாச்சரத்தையுமா என நாம் முடிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். மற்றொரு கோணத்தில் சிந்தித்தால்,இளைய தலைமுறை தறிகெட்டு திரிகிறது என்று இவர்கள் சொல்லும்போது அதற்கு காரணம் என்ன என்ற ஒரு பெரும் கேள்வி எழுகிறது. தோண்டி துருவி ஆராய்ந்தால் நமது சமுதாயமும் ,இன்று வாய் கிழிய நம்மை குறை சொல்லும் முந்தைய தலைமுறையுமே முக்கிய குற்றவாளிகளாக தெரிகிறார்கள்.

பேடிகள் என தாய்மொழி தெரியாதவர்களை சாடிய காந்தியடிகள், குழந்தையின் உடல் வளர்ச்சிக்கு தாய்ப்பால் எவ்வளவு இன்றியமையாததோ, அதேயளவு அதன் மன வளர்ச்சிக்கு தாய்மொழி இன்றியமையாதது. குழந்தை தன் முதல் பாடத்தைக் கற்பது தாயிடம் இருந்துதான். அப்படியிருக்க, குழந்தையின் உள வளர்ச்சிக்கு தாய் மொழி அன்றி வேறொரு மொழியைத் திணிப்பது தாய் நாட்டுக்குச் செய்யும் பெரிய பாவம், என்றும் சொல்கிறார். அது மட்டுமில்லாமல் தாய் மொழியை தாய்பால் என்றும் பிற மொழிகளை புட்டி பால் என்றும் வர்ணிக்கிறார். இங்கு தாய்ப்பாலான தமிழை மறுத்து புட்டி பாலான ஆங்கிலத்தை எங்களுக்கு ஊட்டி நாட்டுக்கு பெரிய பாவம் செய்தவர்கள் யார் என்பதை எங்களை குறை சொல்லுவோர் ஏன் யோசிக்க மறுக்கிறார்கள். மொழி ரீதியாக மட்டுமில்லாமல் நடை,உடை,பாவனை,கலாச்சாரம் என அனைத்திலும் ஆங்கிலத்தை முன்னிருத்தியே எங்களை வளர்க்கிறீர்கள். மூன்று வயது ஆகிறதோ இல்லையோ முதலில் எங்களை பள்ளியில் சேர்க்கிறீர்கள்.நீங்கள் எங்களை சேர்ப்பது இளங்கோவடிகள் பாட சாலையோ, அகத்தியன் குரு குலமோ இல்லை மாறாக St.Joseph's higher secondary school, St.peter's higher secondary school என்ற ஏதோவொரு ஆங்கில பள்ளியில் சேர்க்கிறீர்கள்.

கிராமத்து ஏர் உழும் கிழவனின் கோவணத்தை போன்ற துணியை பிஞ்சு கழுத்தில் இறுக்கி "டை" என்றீர்கள். காலிலே எதையோ மாட்டி "ஷூ" என்றீர்கள். அம்மாவை "மம்மி" எனவும் அப்பாவை "டாடி" எனவும் கூப்பிட வைத்தீர்கள். பொம்மைகளோடு விளையாடும் பிஞ்சுகளை நாலு வரி நோட்டில் ஆங்கிலத்தில் எழுத வைத்து விரல்களை ஓடித்தீர்கள். "நிலா நிலா ஓடி வா" என பாடும் குழந்தையை ஏளனமாகவும்,"Johnny Johnny Yes,Papa" ,என Johnny என்பது பெயரா இல்லையா என்றே தெரியாமல் பாடும் குழந்தையை பெருமிதத்துடன் பார்த்தீர்கள்.இவ்வாறு பிஞ்சு வயதில் நஞ்சை கலந்து விட்டு மொழி பற்றி இப்பொழுது குமுறுவது வேடிக்கை.இப்படி முட்டாள்தனமாக வேற்று மொழிக்காக மழலைகளின் சிறகொடித்து, விரலோடித்து துன்புறுத்தி அவர்கள் சிரிப்பை தொலைக்கிறீர்கள் .அதிகாலையில் பள்ளி என சொன்னாலே முகம் வாடும் குழந்தைகள் எத்தனை ஆயிரம்?.வாடிய பயிர்களை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலார் இந்த வாடிய பிஞ்சுகளை கண்டிருந்தால் என்ன ஆகியிருப்பார்?. இது மட்டுமா,பள்ளியில் நங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும்,மீறி தமிழில் பேசினால் அபராதம்.எங்களது வாழ்கையின் பெரும்பாலான முதல் 18 ஆண்டுகளை பள்ளியிலே ஆங்கிலத்தில் கழிக்கும் பொது தமிழ் எங்கிருந்து வரும்,எப்படிநாங்கள் தமிழில் சரளமாக பேசுவோம்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் எப்படி வளையும். இதை விட வெட்கக்கேடு, தமிழுக்கு 2 ,3 மொழியாக கூட பள்ளிகளில் இடமில்லை. ஹிந்தி, சமஸ்கரிதம், பிரெஞ்சுக்கு உள்ள மரியாதை தமிழுக்கு இல்லை. சில பள்ளிகள் தமிழை போதிப்பதே இல்லை,அப்படி தவறி கற்பிக்க முன் வந்தாலும் நமது மொழி பற்று மிக்க முந்தைய தலைமுறை நம்மை மற்ற மொழிகளை படிக்க வைக்கிறது. அறிவை கூர்மையாக்கி சிந்தனை ஆற்றலை தூண்ட வேண்டிய பள்ளிகளோ நம்மை அடக்கி ஒடுக்கி எது சரி எது தவறு என்று சிந்திக்க கற்றுக் கொடுக்காமல் புத்தகத்தில் இருப்பதை தேர்வு தாளில் எவ்வளவு நேர்த்தியாய் வாந்தி எடுக்க வேண்டும் என்ற நோக்கிலே போதிக்கின்றன. இப்படி தமிழை காலில் அணியும் காலனியை விட கேவலமாக நடத்தி விட்டு எப்படி மொழி பற்றி இவர்கள் பேசுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை.

Thursday, 7 March 2013

மார்ச்சு 08 - உலக மகளிர் தினம்..

 மார்ச்சு 08 - உலக மகளிர் தினம்..
இனிய வாழ்த்துக்கள் மகளிர்
அனைவருக்கும். நல் வணக்கத்துடன்...
 மகாகவி பாரதியின் பார்வையில் புதுமைப் பெண்ணின்
இலக்கணம்..
 "நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெஞ்சுரம்"
 "சேர்த்த பொருளை சிக்கனமா செலவு செய்ய
பக்குவமா அம்மா கையில கொடுத்து போடு
செல்லக்கண்ணு..
 அத ஆறு நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு"..
 பட்டுக்கோட்டையாரின் பாட்டு வரிகள்...
 மேற்கோள்களை நினைவு கூர்ந்து பாரதி
மொழிந்தவாறு
"போற்றி போற்றி ஓர் ஆயிரம் போற்றி நின்
பொன்ன டிக்குப்பல் லாயிரம் போற்றி காண்"..
 என இதயப் பூர்வமான மகளிர் தின
வாழ்த்துக்கள்..
 "நாட்டிற்க்கு ஏற்றம் தருவது
பெண்களின் முன்னேற்றம்"
- அறிஞர் அண்ணா..