20 ஓவர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. “சூப்பர் 8”
சுற்றில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில்
ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.
“டாஸ்” வென்று முதலில் விளையாடிய இந்திய அணியால் 20 ஓவரில் 7 விக்கெட்
இழப்புக்கு 140 ரன்னே எடுக்க முடிந்தது.
இர்பான் பதான் அதிகபட்சமாக 30 பந்தில் 31 ரன்னும், ரெய்னா 19 பந்தில் 26 ரன்னும் எடுத்தனர். வாட்சன் 3 விக்கெட்டும், கும்மின்ஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 31 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 1 விக்கெட்டை இழந்தது. 141 ரன் இலக்கை எடுத்தது. வாட்சன் 42 பந்தில் 72 ரன்னும் (2 பவுண்டரி, 7 சிக்சர்), வார்னர் 41 பந்தில் 63 ரன்னும் (7 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.
நேற்றைய போட்டியிலும் இந்திய அணி 5 பவுலர்களுடன் விளையாடியது. இதனால் ஷேவாக் மீண்டும் நீக்கப்பட்டார். ஷேவாக் நீக்கப்பட்டதால் கேப்டன் டோனி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். ஆனால் ஷேவாக்கை நீக்கியதை அவர் நியாயப்படுத்தி உள்ளார். இது குறித்து டோனி கூறியதாவது:-
ஆடுகள தன்மைக்கு ஏற்றவாறு முதன்மை சுழற்பந்து வீரர்கள் 3 பேர் சேர்க்கப்பட்டனர். 20 ஓவர் போட்டியில் இது சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலான கொள்கை ஆகும். எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் நீக்குவது என்பது கடினமானதே. அதே நேரத்தில் எனது ஒவ்வொரு செயலையும் நியாயப்படுத்த வில்லை.
மோசமான பேட்டிங் மற்றும் மழையால் தோல்வி அடைந்தோம். எங்களது தொடக்கம் சிறப்பாகவே இருந்தது. ஆனால் மிடில் விக்கெட்டுகள் சரிந்து விட்டன. இது தான் தோல்விக்கு முக்கிய காரணமாகும். 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். நாங்கள் பவுலிங் செய்வதற்கு தயாராக இருந்தபோது மழை வந்துவிட்டது. தவறான நேரத்தில் மழை வந்தது. இது எங்களுக்கு பாதகமாகி விட்டது.
ஏனென்றால் சுழற்பந்து வீரர்களால் பந்தை பிடித்து வீசுவதற்கு ஏற்ற வகையில் அமையவில்லை. இதுவும் தோல்விக்கு முக்கிய காரணமாகும். வாட்சன், வார்னரின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது.
இவ்வாறு டோனி கூறினார்.
ஆஸ்திரேலிய கேப்டன் பெய்லி வெற்றி குறித்து கூறும்போது, கும்மின்ஸ் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. தொடக்க வீரர்கள் மிகவும் அபாரமாக ஆடினார்கள். அடுத்து தென்ஆப்பிரிக்காவை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.
இர்பான் பதான் அதிகபட்சமாக 30 பந்தில் 31 ரன்னும், ரெய்னா 19 பந்தில் 26 ரன்னும் எடுத்தனர். வாட்சன் 3 விக்கெட்டும், கும்மின்ஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா 31 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 1 விக்கெட்டை இழந்தது. 141 ரன் இலக்கை எடுத்தது. வாட்சன் 42 பந்தில் 72 ரன்னும் (2 பவுண்டரி, 7 சிக்சர்), வார்னர் 41 பந்தில் 63 ரன்னும் (7 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.
நேற்றைய போட்டியிலும் இந்திய அணி 5 பவுலர்களுடன் விளையாடியது. இதனால் ஷேவாக் மீண்டும் நீக்கப்பட்டார். ஷேவாக் நீக்கப்பட்டதால் கேப்டன் டோனி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். ஆனால் ஷேவாக்கை நீக்கியதை அவர் நியாயப்படுத்தி உள்ளார். இது குறித்து டோனி கூறியதாவது:-
ஆடுகள தன்மைக்கு ஏற்றவாறு முதன்மை சுழற்பந்து வீரர்கள் 3 பேர் சேர்க்கப்பட்டனர். 20 ஓவர் போட்டியில் இது சூழ்நிலைக்கு ஏற்ற வகையிலான கொள்கை ஆகும். எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் நீக்குவது என்பது கடினமானதே. அதே நேரத்தில் எனது ஒவ்வொரு செயலையும் நியாயப்படுத்த வில்லை.
மோசமான பேட்டிங் மற்றும் மழையால் தோல்வி அடைந்தோம். எங்களது தொடக்கம் சிறப்பாகவே இருந்தது. ஆனால் மிடில் விக்கெட்டுகள் சரிந்து விட்டன. இது தான் தோல்விக்கு முக்கிய காரணமாகும். 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். நாங்கள் பவுலிங் செய்வதற்கு தயாராக இருந்தபோது மழை வந்துவிட்டது. தவறான நேரத்தில் மழை வந்தது. இது எங்களுக்கு பாதகமாகி விட்டது.
ஏனென்றால் சுழற்பந்து வீரர்களால் பந்தை பிடித்து வீசுவதற்கு ஏற்ற வகையில் அமையவில்லை. இதுவும் தோல்விக்கு முக்கிய காரணமாகும். வாட்சன், வார்னரின் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது.
இவ்வாறு டோனி கூறினார்.
ஆஸ்திரேலிய கேப்டன் பெய்லி வெற்றி குறித்து கூறும்போது, கும்மின்ஸ் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. தொடக்க வீரர்கள் மிகவும் அபாரமாக ஆடினார்கள். அடுத்து தென்ஆப்பிரிக்காவை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றார்.

No comments:
Post a Comment