ஒரு நாள் அவ்வாறு குளிக்க சென்ற பொழுது திடீரென்று மழை பெய்திருக்கிறது.நெல நனைந்து விடுமே என்ற பதட்டத்தில் பக்தன் வேகமாக வந்த பார்த்த பொழுது ஒரு அதிசயத்தை கண்டார்.நெல் உலருவதற்கு போட்டிருந்த இடத்தில் மட்டும் மழை பெய்யவில்லை .அதை சுற்றி மட்டும் மழை பெய்திருந்தது .நெல் உலர்த்திய இடத்தில் வெயில் அடித்தது . இறைவன் நெல்லுக்கு வேலி அமைத்து காத்ததினால் இந்த நகருக்கு திருநெல்வேலி என்ற காரண பெயர் வந்தது.அதுவரை இந்த ஸ்தலத்தின் பெயர் வேணுவனம் என்று இருந்ததாக வரலாறு .இன்னொரு சிறப்பு சிவபெருமான் நடராச பெருமானாக நடனமாடிய ஐந்து திருசபைகளில் ,இதுவும் ஓன்று .நெல்லைஅப்பர் கோவில் தாமிரை சபை என்று அழைக்க படுகிறது .இங்கும் மதுரை மீனாக்ஷி கோவிலில் உள்ளது போல ஒரு ஆயிரம் கால் மண்டபம் உள்ளது .ஆண்டுதோறும் அம்மன் திருகல்யாணம் இந்த மண்டபத்தில் நடைபெறும் .இரண்டாவது பிரகாரத்தில் தாமிரை சபை உள்ளது .மூன்றாவது பிரகாரத்தில் முரக பெருமானுக்கு தனி சன்னதி உண்டு.மயில் அமர்ந்த கோலத்தில் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருகிறார்.இன்னொரு சிறப்பு தமிழகம் எங்கும் உள்ள கோவில்களில் மார்கழி மாதம் அதிகாலை 4 மணிக்கே திறந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும் .அனால் நெல்லையப்பர் கோவிலில் மார்கழி சிறப்பு ஆராதனைகள் இல்லை.அதற்க்கு பதில் கார்த்திகை மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கே திறந்து சிறப்பு ஆராதனைகள் செய்யபடுகிறது.
ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக
756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி
அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய
சிவாலயமாக உள்ளது.[1]அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல்
மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள்
சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம்
ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக
ஒரு அழகான வெள்ளை நிற
நந்தி சிலை உள்ளது.
கொடிமரத்தைச்
சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவர்
சிலை உள்ளது. அதற்கு முன்பு
மிகப்பெரிய ஆனைமுகன் சிலை உள்ளது. சுமார்
9 அடி இருக்கும். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில்
எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர்,
மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன.
கோவிந்தப் பெருமாள், சிவனுக்கு அருகிலேயே சயனித்திருப்பார். இது சைவ வைணவ
ஓற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
நெல்லையப்பர்
கோவில் பிரகாரத்திலுள்ள இசைத் தூண்கள்இரண்டாவது பிரகாரம்
சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே “ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும்
தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப்
பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப்
பிரகாரத்தில் தான் “தாமிர சபை”
உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர்,
சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.
மூன்றாவது
பிரகாரம் மிகப் பெரியது. மிக
அகலமானது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக
அம்மன் சந்நிதி செல்வதற்கு வழி
அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன்,
மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா
ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு.
கோயிலின் உள்ளே மிகப் பெரிய
உள் தெப்பம் ஒன்று உள்ளது.
இதுபோல் கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர்
தூரத்தில் வெளித்தெப்பம் ஒன்றும் உள்ளது.

No comments:
Post a Comment