Tuesday, 24 December 2013

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறும்

அடுத்த ஆண்டு நடைபெறும் 7-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அணி நிர்வாகமும், 5 இந்திய வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்படி தக்கவைக்கும் வீரர்களில், முதல் வீரருக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும், ஒரு அணி அதிகபட்சமாக 60 கோடி ரூபாய் வரை ஏலத்திற்காக செலவிடலாம் என்றும் ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வீரர்கள் ஏலம், தேவைப்பட்டால் பிப்ரவரி 13-ம் தேதியும் நடைபெறும் என்றும், ஏலம் நடைபெறும் இடம் விரைவில் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment