சென்னை:
பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கான
ரிசல்ட் மே 9-ந் தேதியன்றும்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு
எழுதிய மாணவர்களுக்கான ரிசல்ட் மே 31-ந்
தேதியன்றும் வெளியாகும் என்று தமிழக அரசு
அறிவித்துள்ளது. தமிழக அரசு இன்று
வெளிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தேர்வு முடிவுகளின் தேதிகள்
அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ந்
தேதி தொடங்கி மார்ச் 27-ந்
தேதி வரை நடைபெற்றது. இத்
தேர்வில் 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 பேர் எழுதினர். 2,020 தேர்வு
மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
மே 9-ந் தேதியன்று வெளியிடப்படுகிறது.
தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு
கடந்த மார்ச் 27-ந் தேதியன்று தொடங்கி
ஏப்ரல் 12-ந் தேதி வரை
தமிழகம் முழுவதும் நடைபெற்றது. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 11,359 பள்ளிகளை சேர்ந்த 10 லட்சத்து 69501 மாணவ, மாணவிகள் தேர்வு
எழுதினர். இதற்காக 3013 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 5 லட்சத்து 43 ஆயிரத்து 511 மாணவர்களும், 5 லட்சத்து 25 ஆயிரத்து 990 மாணவியரும் எழுதியிருந்தனர். இவர்களுக்கான தேர்வு முடிவு மே
31-ந் தேதியன்று வெளியிடப்படுகிறது.
+2 தேர்வு முடிவுகள் வரும் மே 9 ஆம் தேதி காலை 1௦ மணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 31 ஆம் தேதி காலை 9.15 க்கும் வெளியிடப்படும் என தமிழ்நாடு தேர்வுத் துறை இயக்குநர் தெரவித்துள்ளார்.
தேர்வு முடிவுகள் இவ்வாண்டு தமிழக அரசின் கல்வித்துறை இணையதளங்களில் மட்டுமே வெளியிடப்படும்.
+2 தேர்வு முடிவுகள் வரும் மே 9 ஆம் தேதி காலை 1௦ மணிக்கும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 31 ஆம் தேதி காலை 9.15 க்கும் வெளியிடப்படும் என தமிழ்நாடு தேர்வுத் துறை இயக்குநர் தெரவித்துள்ளார்.
தேர்வு முடிவுகள் இவ்வாண்டு தமிழக அரசின் கல்வித்துறை இணையதளங்களில் மட்டுமே வெளியிடப்படும்.
No comments:
Post a Comment